மணிச்சிகை - காலாண்டு மின்னிதழ்
செந்தமிழ்க் கல்லூரி மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் நல்ல நோக்கோடு மணிச்சிகை' எனும் காலாண்டு மின்னிதழ் 2024-ஆம் ஆண்டு சனவரி மாதம் தொடங்கப்பட்டு வெளிவருகின்றது. தென்பொதிகையில் மலர்ந்திட்ட 99 வகையான மலர்களுள் ஒன்றான மணிச்சிகை தமிழரின் மதிப்புமிகு பண்புகளை மாண்புறச் செய்கிறது. மணியெனும் ஓசையினையும் சிகையெனும் அலங்காரமுடையதாய் திகழும் காலாண்டு இதழ் மணிச்சிகை. இவ்விதழில் செந்தமிழ்க் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்களின் கட்டுரை, கவிதை, சிறுகதை, ஓவியம் போன்ற படைப்புகள் இடம் பெறுகின்றன.OCT-DEC2024
JUL-SEP2024
APR-JUN2024
JAN-MAR2024